இவ்வாண்டின் ஜுலை திங்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட 27 தொடர் வண்டிகள் பாகிஸ்தானின் லாகூர் நகர அரசுக்கு ஒப்படைக்கப்படும். ஏனைய 26 தொடர் வண்டிகளும் இவ்வாண்டின் இறுதியில் வழங்கப்படும். அப்போது, பாகிஸ்தானில் நகர் சுரங்க இருப்பு பாதை இல்லாத வரலாறு நிறைவடையும் என்று பாகிஸ்தானின் பிஸ்னஸ் ரெக்கார்டர் எனும் செய்தி தாள் 22-ஆம் நாள் தெரிவித்தது.
2015-ஆம் ஆண்டு ஏப்ரல், லாகூர் நகரின் ஆரஞ்சி நிற சுரங்க இருப்புப் பாதை திட்டப்பணி தொடர்பான உடன்படிக்கையில் இரு நாட்டு அரசுகள் கையொப்பமிட்டன. சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழியின் கட்டுமானத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலாவது பெரிய ரக நகர போக்குவரத்துத் திட்டப்பணியாக இது திகழ்கிறது. மொத்தம் 26 கிலோமீட்டர் நீளமுடைய நகர சுரங்க இருப்புப் பாதையில் 26 தொடர் வண்டி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உச்சவரம்பு வேகம் மணிக்கு 80கிலோமீட்டராகும். தவிர, இத்தொடர் வண்டியில் எரியாற்றலைச் சிக்கனப்படுத்துவதற்குரிய குளிர் காற்று வசதி பொருத்தப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.(தேன்மொழி)