வட இந்தியாவின் உத்தரகண்ட் பிரதேசத்தில் 23ஆம் நாள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என்று இந்தியக் காவற்துறை 24ஆம் நாள் தெரிவித்தது.
காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்திற்கான காரணம் கள ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, ஆண்டுக்கு இந்தியாவில் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் போக்குவரத்து விபத்தில் உயிரிழக்கின்றனர்.(சரஸ்வதி)