சீனாவின் செச்சியாங் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த 2வது மருத்துவமனையும், சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் கலாமயி மத்திய மருத்துவமனையும் 23ஆம் நாள், பாகிஸ்தானின் குவடார் பிரதேச மருத்துவமனையுடன் நோய் பற்றிய தொலைதூர கூட்டாய்வு ஒன்றை முதல்முறையாக நடத்தின. 8 வயதுள்ள பாகிஸ்தான் ஆண் குழந்தைக்கு இக்கூட்டாய்வு மருத்துவச் சிகிச்சையை வழங்கியது.