மத்திய கிழக்குப் பிரதேசத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் வகையில், இஸ்ரேலும் அரபு நாடுகளும் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் 23ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.
ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவது, மத்திய கிழக்குப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் பொதுவான நலன்களுக்குப் பொருந்தியதாக அமையும் என்று இஸ்ரேலில் பயணம் மேற்கொண்ட டிரம்ப் அன்று மாலை இஸ்ரேல் அருங்காட்சியத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.