தலைமையமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக நேபாள தலைமையமைச்சர் பிரசண்டா 24ஆம் நாள் அறிவித்தார்.அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டில் தொலைக்காட்சி மூலம் அதே நாள் அவர் உரை நிகழ்த்தினார். 300க்கும் குறைவான நாட்களில், அவரது அரசியல் சாதனைகள், எடுத்துக்காட்டாக, பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி அடைந்தது, மின்சாரப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்தது உள்ளிட்டவைகள் குறித்து அவரது சாதனைகளைத் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டின் ஆக்ஸ்டு திங்களில், பிரசண்டா அந்நாட்டின் புதிய தலைமையமைச்சராக பதவியேற்றார். இதற்கு முன்பு, 2008ஆம் ஆண்டின் ஆக்ஸ்டு திங்கள் முதல் 2009ஆம் ஆண்டின் மே திங்கள் வரை, நேபாளக் கூட்டாட்சி ஜனநாயக குடியரசின் முதலாவது தலைமையமைச்சராக அவர் பதவி வகித்தார்.