பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோ தீவின் மாலாவியில், இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் மாவுத் குழு உள்ளிட்ட அரசுக்கு எதிரான ஆயுத குழுவினர்களுக்கும் இடையே சண்டை 24ஆம் நாள் தொடர்ந்து வந்தது. தற்போது வரை, மாவுத் குழுவைச் சேர்ந்தவர் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் 33பேர் காயமடைந்தனர் என்று செய்தி வெளியிடப்பட்டது.
ரஷியாவில் தனது பயணத்தை அவசரமாக இடைநிறுத்தி, பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் ரோட்ரிகோ டுட்டெர்ட்டே 24ஆம் நாள் மாலை தலைநகர் மணிலாவுக்கு திரும்பினார். வடபகுதியிலுள்ள லுஸன் தீவில் அரசுக்கு எதிரான ஆயுததாரிகளைக் கண்டறிந்தால், நாடு முழுவதும் ராணுவ ஆட்சியை அமல்படுத்தப் போவதாக ரோட்ரிகோ கூறினார்.
பிலிப்பைன்ஸின் தென் பகுதியிலுள்ள மின்டானோ தீவு உள்ளிட்ட பகுதிகளில், ராணுவ ஆட்சி அமலுக்கு வந்து 60 நாட்கள் நீடிக்கும் என்று ரோட்ரிகோ 23ஆம் நாள் அறிவித்தார்.