பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பும், ரஷியா உள்ளிட்ட இவ்வமைப்புச் சாரா கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளும், 25-ஆம் நாள் வியன்னாவில் கூட்டத்தை நடத்தி, கச்சா எண்ணய் உற்பத்தி அளவைக் குறைப்பது பற்றிய உடன்படிக்கையின் நடைமுறையாக்க கால வரம்பை 9 திங்கள் காலம் நீட்டிக்க முடிவு செய்துள்ளன.
இரு தரப்புகளின் கலந்தாய்வின்படி, கடந்த ஆண்டின் இறுதியில் உடன்படிக்கையில், ஒரு நாளுக்கு சுமார் 18 இலட்சம் பீப்பாய்கள் உற்பத்தி குறைவு தொடர்பான நிலைமை 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் வரை நீட்டிக்கப்படும்.
இந்த முடிவு மீது சந்தையில் ஏமாற்றம் காணப்பட்டுள்ளது.(தேன்மொழி)