இந்திய தலைமையமைச்சர் பதவி ஏற்ற பிந்திய மூன்று ஆண்டுகளில், நரேந்திர மோடியின் ஆளும் திறன் மீது இந்திய பொது மக்கள் மனநிறைவு தெரிவித்துள்ளனர் என்பதை அந்நாட்டின் 'இன்டியா டைம்ஸ்' மற்றும் தொடர்புடைய இணையத் தளங்களில் வெளியிடப்பட்ட பொது மக்கள் கருத்துக் கணிப்பின் முடிவு காட்டுகிறது.
பத்து இலட்சத்துக்கும் அதிகமான வாசகர்கள் இந்த கருத்துக் கணிப்பில் பங்கெடுத்தனர். அவர்களில், 77விழுக்காட்டினர் மோடி அரசின் ஆளும் திறன் பற்றி மதிப்பீடு செய்தபோது, மனநிறைவு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். (தேன்மொழி)