ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, 25-ஆம் நாள் மாஸ்கோவில் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் சந்தித்துரையாடினார்.
ரஷியாவும் சீனாவும் உண்மையான பன்முக உத்திநோக்கு ஒருங்கிணைப்பு கூட்டாளிகளாக திகழ்கின்றன. தற்போது, ரஷிய பொருளாதாரம் சீரான திசையில் வளர்ந்து வருகின்றது. இரு நாட்டு அரசு வாரியங்களுக்கிடையேயான தொடர்பை அதிகரித்து, நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, இரு நாட்டு தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கு சீரான நிபந்தனைகளை உருவாக்க வேண்டும் என்று புதின் விருப்பம் தெரிவித்தார்.
வாங் யீ கூறுகையில், இரு நாட்டு ஒத்துழைப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு. வர்த்தகம், முதலீடு, எரியாற்றல், விண்வெளிப் பயணம், நிதி உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்புகளை அதிகரிக்க சீனா விரும்புகின்றது என்றார். மேலும், சர்வதேச விவகாரத்தைச் சமாளிப்பதில், இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டு உத்திநோக்கு நலன்களை உறுதியாக பேணிக்காக்க வேண்டும் என்றும் வாங் யீ விருப்பம் தெரிவித்தார்.(தேன்மொழி)