"ஹுவாலுங் ஒன்று", சீனா சொந்தமாக ஆய்ந்து உருவாக்கியுள்ள 3ஆவது தலைமுறை அணு மின்சாரத் தொழில் நுட்பமாக திகழ்கிறது. ஃபூச்சிங் அணு மின் நிலையத்தின் 5ஆம் பிரிவில், ஹுவாலுங்-ஒன்று பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இது குறித்து சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங்கின் அறிவுறுத்தலில், சீனத் தயாரிப்பு 2025 எனும் நெடுநோக்குத் திட்டத்தை நடைமுறைபடுத்தும் போக்கில் முன்மாதிரியான திட்டமாக, ஹுவாலுங் ஒன்று விளங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டது.