இலங்கை அரசுத் தலைவர் சிரிசேனா, தலைமை அமைச்சர் விக்ராமாசிங்கே ஆகியோர் 26, 27 ஆகிய நாட்களில், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி உறுப்பினரும் ராண்டி சர்வதேச சிந்தனை கிடங்கின் நிபுணர் குழுத் தலைவருமான சௌ பாய்கே உள்ளிட்ட பலர்களைச் சந்தித்தனர்.
இலங்கைத் தலைவர்கள் கூறுகையில், இருநாடுகளின் பொருளாதார உடன்படிக்கை மற்றும் திட்டப்பணிக்கான ஒத்துழைப்புகளை விரைவுபடுத்த இலங்கை விரும்புகிறது என்றும், இலங்கைக்கான முதலீட்டை சீன தொழில் நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
சௌ பாய்கே கூறுகையில், சூரிய ஆற்றல், வேளாண்மை, தொடரவல்ல வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.(வான்மதி)