கீலங்-ராஸுவ்காதி எல்லைப் பகுதியில் இந்த ஒளிஇழை பிணையம் சந்திக்கிறது. இதன்மூலம், சர்வதேச தொலைத்தொடர்பு மற்றும் இணையம் ஆகிய வசதிகளுக்காக நேபாளம், இந்தியாவை மட்டுமே சார்ந்திருக்கும் அவசியம் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த ஜூனில் நேபாள தொலைத்தொடர்பு அமைப்பும், சீன டெலிகாம் நிறுவனமும் ஒளிஇழை பிணையத்தை முதன்முறையாக ஏற்படுத்தின. ஆனால் சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நிலத்தடியில் இருந்த ஒளிஇழை பாதிப்படைந்தது. இது, மே மாதத்துக்குள் சரி செய்யப்படும் என்று சீன டெலிகாம் தெரிவித்ததாக நேபாள தொலைத்தொடர்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சோவன் அதிகரி தெரிவித்தார்.
இது செயலுக்கு வரும் பட்சத்தில் சீன நிறுவனங்களிடமிருந்து இணைய அலைக்கற்றைகளை நேபாளம் வாங்கும். போட்டி சூழல் காரணமாக, நேபாளத்தில் இணைய சேவைக்கான செலவு குறையும் என்றும் சோவன் குறிப்பிட்டார்.