• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியா, மோரீஷியஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  2017-05-28 18:51:31  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியா, மோரீஷியஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்தாகின. மோரீஷியஸ் தலைமை அமைச்சர் பிரவிந்த் ஜெகந்நாத், 3 நாள் பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெகந்நாத்தை, இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார்.

போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், மோரீஷியஸுக்கு 50 கோடி அமெரிக்கா டாலர் நிதியுதவி, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கும்.

சந்திப்புக்குப் பின் மோடி வெளியிட்ட அறிக்கையில், மோரிஷியஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்களில் பங்கெடுப்பது இந்தியாவுக்கு பெருமையானது. மோரிஷியஸுக்கான 50 கோடி டாலர் நிதியுதவி ஒப்பந்தம், அந்நாட்டின் வளர்ச்சித் திட்டப்பணியில் இந்தியா செலுத்தி வரும் வலுவான நிலைப்பாட்டைக் காட்டும் ஓர் எடுத்துக்காட்டாகும் என்று தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளின் உறவைத் தவிர, பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக மோடி குறிப்பிட்டிருந்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040