போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், மோரீஷியஸுக்கு 50 கோடி அமெரிக்கா டாலர் நிதியுதவி, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கும்.
சந்திப்புக்குப் பின் மோடி வெளியிட்ட அறிக்கையில், மோரிஷியஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்களில் பங்கெடுப்பது இந்தியாவுக்கு பெருமையானது. மோரிஷியஸுக்கான 50 கோடி டாலர் நிதியுதவி ஒப்பந்தம், அந்நாட்டின் வளர்ச்சித் திட்டப்பணியில் இந்தியா செலுத்தி வரும் வலுவான நிலைப்பாட்டைக் காட்டும் ஓர் எடுத்துக்காட்டாகும் என்று தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளின் உறவைத் தவிர, பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக மோடி குறிப்பிட்டிருந்தார்.