சிரியாவில் இந்த சட்டவிரோத வான் தாக்குதலை சர்வதேச கூட்டணி நிறுத்த வேண்டும். இது சிரியாவின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டை மீறியுள்ளது. இத்தகைய நடவடிக்கை சீர்குலையை மட்டுமே விளைவிக்கும் என்று சிரிய வெளியுறவு அமைச்சகம் 27ஆம் நாள் ஐ.நா தலைமை செயலாளர் மற்றும் பாதுகாப்பவைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.