சீன அரசவை உறுப்பினர் யாங்ஜியேசூ 29ஆம் நாள் டோக்கியோவில் ஜப்பான் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் யாதி சோதாரோவுடன் இணைந்து 4ஆவது சீன-ஜப்பான் உயர் நிலை அரசியல் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினார்.
பரஸ்பர அரசியல் நம்பிக்கை நாடுகளுக்கிடையேயான சுமுக உறவின் அடிப்படை உத்தரவாதமாகும். சீன-ஜப்பான் உறவின் மீது சீனா எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று அச்சுறுத்தல்களை அளிப்பது அல்ல ஒத்துழைப்புக் கூட்டாளியாகும் என்ற ஒத்த கருத்தை, கொள்கை மற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் செயல்படுத்த வேண்டுமென யாங்ஜியேசூ விருப்பம் தெரிவித்தார்.
சோதாரோ கூறுகையில், ஜப்பான்-சீன உறவைப் பன்முகங்களிலும் மேம்படுத்துவதில் ஜப்பான் சீனத் தரப்புடன் இணைந்து பாடுபட விரும்புகிறது என்றார்.