• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கையில் வெள்ளப்பெருக்கில் 180 பேர் சாவி
  2017-05-30 14:26:14  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கையின் அதிகாரம் மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்களின் புதிய புள்ளிவிபரங்களின்படி, புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் இலங்கையில் 180 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேலானோர் காணாமல் போயினர்.

கடும் மழையை ஏற்படுத்திய சூறாவளி, இலங்கையிலிருந்து கரைகடந்த போதிலும், தென்மேற்கு பருவக்காற்றின் பாதிப்பில், பல இடங்களில் கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சர்வதேச சமூகம் இலங்கையில் மீட்புதவிப் பணியை அதிகரித்து வருகிறது. சீன அரசு, இலங்கைக்கு 1 கோடியே 50 இலட்சம் யுவான் மதிப்புள்ள மனித நேய உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது. கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அவசரத் தேவை பொருட்களை வெகுவிரைவில் இலங்கையை வந்தடையும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இலங்கையில் மீட்புப் பணிக்கு உதவி செய்யும் வகையில், சில உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட மீட்புதவிப் பொருட்களைக் கொண்ட 2 கப்பல்களை இந்திய இராணுவம் 29ஆம் நாள் அனுப்பியுள்ளது என்று இந்தியா அதிகார செய்தி ஊடகம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மருத்துவ குழுக்களை அனுப்பவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040