வடகொரியா, அனைத்து அணு ஆயுதம் மற்றும் தற்போதைய அணு ஏவுகணைத் திட்டத்தையும் முற்றிலும் கைவிட வேண்டும். எறிவிசை ஏவுகணை தொழில் நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி ஏவுகணை செலுத்தல் மற்றும் அணு ஆயுத பரிசோதனையையும் நடத்த கூடாது என்று இத்தீர்மானத்தில் ஐ.நா பாதுகாப்பவை மீண்டும் வலியுறுத்தியது.
கொரிய தீபகற்பம் மற்றும் வடக்கிழக்காசியப் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாக்கும் முக்கியத்துவத்தை ஐ.நா பாதுகாப்பவை உறுதிப்படுத்தியுள்ளதோடு, தூதாண்மை மற்றும் அரசியல் முறையுடன் பிரச்சினையை அமைதியாக தீர்க்கும் திட்டத்தை உருவாக்க பாடுபடுவதாகவும் ஐ.நா பாதுகாப்பவை தெரிவித்துள்ளது.(கலைமகள்)