• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வடகொரியா பற்றிய தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பவை ஏற்றுக்கொண்டுள்ளது
  2017-06-03 16:08:01  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ.நா பாதுகாப்பவை 2ஆம் நாள் தீர்மானம் ஒன்றை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு, வடகொரியாவின் அணு ஏவுகணை நடவடிக்கையை கடுமையாக கண்டித்து, மேலதிகமான தொடர்புடைய தனிநபர்களையும் நிறுவனங்களையும் தடை பெயர்பட்டியலில் சேர்த்துள்ளது.

வடகொரியா, அனைத்து அணு ஆயுதம் மற்றும் தற்போதைய அணு ஏவுகணைத் திட்டத்தையும் முற்றிலும் கைவிட வேண்டும். எறிவிசை ஏவுகணை தொழில் நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி ஏவுகணை செலுத்தல் மற்றும் அணு ஆயுத பரிசோதனையையும் நடத்த கூடாது என்று இத்தீர்மானத்தில் ஐ.நா பாதுகாப்பவை மீண்டும் வலியுறுத்தியது.

கொரிய தீபகற்பம் மற்றும் வடக்கிழக்காசியப் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாக்கும் முக்கியத்துவத்தை ஐ.நா பாதுகாப்பவை உறுதிப்படுத்தியுள்ளதோடு, தூதாண்மை மற்றும் அரசியல் முறையுடன் பிரச்சினையை அமைதியாக தீர்க்கும் திட்டத்தை உருவாக்க பாடுபடுவதாகவும் ஐ.நா பாதுகாப்பவை தெரிவித்துள்ளது.(கலைமகள்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040