• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் இந்தியாவின் எதிர்பார்ப்பு
  2017-06-05 15:35:18  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் செயற்குழுவின் 17ஆவது கூட்டம் விரைவில் கசகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் சேரும் ஒழுங்கு முறையை நனவாக்கவுள்ளன. இந்திய பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு கழகத்தின் உயர்நிலை ஆய்வாளரும், மத்திய ஆசிய பிரச்சினையின் நிபுணருமான ஸ்டாப்டன், அண்மையில் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். புதிய உறுப்பு நாடாக, இந்தியா வெகுவிரைவில் இந்த அமைப்பில் சேர்ந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் பிரதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம், பிரதேச ஒத்துழைப்பு முதலிய துறைகளிலான ஒத்துழைப்பு குறிப்பாணையில் இந்தியா, இந்த அமைப்புடன் கையொப்பமிட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சாசனம் உள்ளிட்ட ஆவணங்களின்படி, உறுப்பு நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, இந்த அமைப்பில் வெகுவிரைவில் ஒருங்கிணையும் என்று கூறினார்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருக்கமான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு உறவு உள்ளது. இரு நாட்டு ஒத்துழைப்புக்கான எதிர்கால வாய்ப்பு பரந்த முறையில் உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பரிமாற்றம் செய்யும் வாய்ப்புகள் அதிகமாக நிலவுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040