சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் உறுப்பினரும், நிங்ச்சி நகர மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவருமான டோர்ஜி ட்செரிங் தலைமையில் சீன மக்கள் பேரவையின் திபெத் பிரிதிநிதிக் குழு ஜூன் 3ஆம் நாள் முதல் 6ஆம் நாள் வரை, தாய்லாந்தில் பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் நாடாளுமன்றத் தலைவர் போர்ன்பெக் விச்சிட்சோல்சை, தாய்லாந்து-சீனப் பண்பாட்டுப் பொருளாதாரச் சங்கத்தின் தலைவர் போகின் பாலகுலா, நிபுணர்கள் முதலியோருடன் இக்குழு பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டது.
திபெத்தின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி, சாதனைகள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவையின் பங்கு முதலியவை குறித்து டோர்ஜி ட்செரிங் அறிமுகப்படுத்தினார். (சரஸ்வதி)