• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-கசகஸ்தான் அரசுத் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை
  2017-06-08 18:00:22  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் கசகஸ்தான் அரசுத் தலைவர் நுர்சுதான் நசர்பயவும் ஜுன் 8ஆம் நாள் கசகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீனா-கசகஸ்தான் இடையேயான பன்முக நெடுநோக்குக் கூட்டுறவை புதிய வளர்ச்சி நிலைக்கு முன்னெடுத்து, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மையை ஏற்படுத்த இரு தரப்பும் முடிவெடுத்துள்ளன.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தையும் ஒளிமிக்க பாதை என்ற புதிய பொருளாதாரக் கொள்கையையும் ஒன்றிணைக்கவும், உற்பத்தித் திறன் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மனித தொடர்பை மேம்படுத்தவும், முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகளில் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தவும், இப்பேச்சுவர்த்தையில் இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.
பேச்சுவார்த்தைக்கு பிறகு, சீன மக்கள் குடியரசு மற்றும் கசகஸ்தான் குடியரசின் தலைவர்களும் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், பொருளாதாரம், வர்த்தகம், அடிப்படை வசதிக் கட்டுமானம், நீர் சேமிப்பு, சுங்க வரி உள்ளிட்ட பல துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040