ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர் செயற்குழுவின் 17ஆவது கூட்டம் 9ஆம் நாள் கசகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங், கசகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுடன் இணைந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தகுநிலை வழங்கப்படுவதாக இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் செயற்குழுக் கூட்டம் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஷீ ச்சின்பிங் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார். இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் ஷாங்காய் எழுச்சியைப் பின்பற்றி, ஒத்துழைப்பு மூலம் வெற்றியைப் பெறுவது என்ற புதிய ரக சர்வதேச உறவின் மாதிரியை நிலைநாட்டியுள்ளன என்றும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, பாதுகாப்பு, நிதானம், வளர்ச்சி, செழுமை ஆகியவற்றை படைத்து, பொது தாயகத்தை உருவாக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.