கசகஸ்தான் அரசுத் தலைவர் நுர்சுடன் நாசர்பாயேவ் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். நடப்பு உலகப் பொருட்காட்சியை நடத்துவதன் மூலம், உலகில் கசகஸ்தானின் புகழை உயர்த்தும் அதே வேளையில், உலக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றத்துக்கு மாபெரும் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார். உலகப் பொருட்காட்சியின் போது, சுமார் 6 ஆயிரம் நடவடிக்கைகள் நடைபெறும். இப்பொருட்காட்சியைப் பார்வையிடும் பன்னாட்டு மக்கள் உலகின் புதிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பச் சாதனைகளை அறிந்து கொள்ளலாம். இது, கசகஸ்தான் மீதான புரிந்துணர்வை அதிகரிக்கும். பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் அறிவியல் ஆய்வு நிறுவனங்களுக்கும் சமூகத்துக்கும் இடையேயான தொடர்பு வலுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.