உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் மகிழுந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாய்க்கால் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள், ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.