12ஆவது சீன-தெற்காசியா வணிகக் கருத்தரங்கு சீனாவின் குன்மிங் நகரில் 12ஆம் நாள் துவங்கியது. கடந்த 10 ஆண்டுகளில், சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடையிலான வர்த்தகத் தொகை, 11 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. வேகமான பொருளாதார வளர்ச்சி தெற்காசிய நாடுகள், சீனாவின் தொழில் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளில், வர்த்தகம், முதலீடு, அடிப்படை வசதிகள், சேவை முதலிய துறைகளில் சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடையில் வளர்ச்சிகள் காணப்பட்டு வருகின்றன. "இணையதளம் ப்ளஸ்"மூலம் புதிய வளர்ச்சி, வேளாண்மை உற்பத்திப் பொருட்களுக்குத் துணை புரிவது, சீன-இந்திய தொழில் முனைவோர் பேச்சுவார்த்தை, நேபாள சுற்றுலா முதலீட்டு வர்த்தகம் பற்றிய விளம்பரக்கூட்டம் முதலிய நிகழ்ச்சிகள் இக்கருத்தரங்கில் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகள், சீன மற்றும் தெற்காசிய நாடுகளின் அரசுகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையில் ஒத்துழைப்புகளை உருவாக்கியுள்ளன.
முதலீட்டுக்கான புரட்சிக் காலத்தில் இந்தியா நுழைந்துள்ளது. மென்மேலும் தொழில் நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று இந்தியாவின் ஏற்றுமதி அமைப்பு ஒன்றியத்தின் தலைவர் கணேஷ் குப்தா வேண்டுகோள் விடுத்தார்.(சிவகாமி)