5ஆவது சீன-தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய சிந்தனை கிடங்கு கருத்தரங்கு ஜூன் 12, 13 நாட்களில், சீனாவின் யுன்னான் மாநிலத்திலுள்ள குன் மிங் நகரில் நடைபெற்றது. புதிய வாய்ப்பு, புதிய பட்டுப்பாதை மற்றும் புதிய நடவடிக்கை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் பின்னணியில், சீன-தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய எதார்த்த ஒத்துழைப்பை ஆழமாக்குவது என்பது, இக்கருத்தரங்கின் தலைப்பாகும். ஒரு மன்றம் மற்றும் ஒரு பாதையின் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கி, சீனாவுக்கும் தென் கிழக்காசிய நாடுகளுக்குமிடையிலான பயனுள்ள உறவை மேம்படுத்தி, பரஸ்பர வெற்றியை நனவாக்குவது, இக்கருத்தரங்கின் நோக்கமாகும். (சிவகாமி)