இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம் மற்றும் அசாமில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்துக்கு 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரைக் காணவில்லை என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்களில் வெள்ளத்தின் பாதிப்பால் மிசோரமில் 10 பேரும், அசாமில் மின்சாரம் பாய்ந்து 2 பேரும் உயிரிழந்தனர்.