வங்காளதேசத்திலும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலும் தொடர்ந்து பெடய்து வரும் கடும் மழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 150க்கு அதிகமானோர் பலியாயினர். பலர் காணாமல் போயினர்.
இந்தியாவின் மிஸோரம், அசாம் ஆகிய இரு மாநிலங்கள் கொட்டும் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல வீடுகள் இடிந்து போயின. பள்ளிகளும் அரசுப் பணியகங்களும் மூடப்பட்டுள்ளன.