பிரிட்டனின் இலண்டனில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று 14ஆம் நாள் அதிகாலையில் தீ விபத்துக்குள்ளானது. இதில், 12 பேர் உயிரிழந்தனர். 68 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று பிரிட்டன் காவல்துறை அன்று தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மீட்புதவிப் பணிகள் தொடர்கின்றன. மேலும், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. சுமார் 200 தீயணைப்பு வீரர்களின் முயற்சியுடன், 14ஆம் நாள் 11.30 மணிக்கு தீ அணைக்கப்பட்டுள்ளது.