9ஆவது நீரிணை கருத்தரங்கு 18ஆம் நாள் சியாமென் நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி தலைவருமான யூ ச்செங்ஷேங் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.
அவர் பேசுகையில், கடந்த ஆண்டு இருகரை உறவு மற்றும் அமைதியான வளர்ச்சியானது, புதிய இடர்ப்பாடு மற்றும் அறைகூவல்களைச் சந்தித்த போதிலும், இருகரைகளின் பரிமாற்றம் வரலாற்றின் புதிய துவக்கப்புள்ளியில் உள்ளது. இருகரைகளின் அரசு சாரா ஒத்துழைப்பை அதிகரிப்பது, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை ஆழமாக்குவது, சக நாட்டவர்களுக்கு நன்மை பயப்பது ஆகியவற்றில் எங்கள் மன உறுதியும் மன நிலையும் மாறவில்லை என்று தெரிவித்தார்.