ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் பாகிஸ்தானின் தூதாண்மை அதிகாரிகள் இருவர், 16ஆம் நாள், தரை வழியே, பாகிஸ்தானுக்குத் திரும்பிய போது காணாமல் பேயினர் என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் 18ஆம் நாள் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானின் தொடர்புடைய தரப்புகளுடன் தொடர்புகொண்டு, இந்த இரு தூதாண்மை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு ஆப்கானிஸ்தான் முயற்சியுடன் உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும், இந்நிகழ்வுக்குக் காரணமானவருக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(சரஸ்வதி)