• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மொசூலில் ஐ.எஸ் அமைப்பு மீது தாக்குதல் நடத்திய ஈராக்கின் அரசுப்படை
  2017-06-19 10:36:19  cri எழுத்தின் அளவு:  A A A   

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசூலில் ஐ.எஸ் அதிதீவிரவாத அமைப்பினால் கட்டுப்படுத்தப்பட்ட கடைசி வலுவிடம் மீது அரசுப் படை 18-ஆம் நாள் தாக்குதல் தொடங்கியது என்று ஈராக் இராணுவம் தெரிவித்தது.

ஈராக் இராணுவ வட்டாரத்தைச் சேர்ந்த கூட்டு செயல் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் அமீர் யாரல்லா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மொசூலின் பழைய நகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் ஐ.எஸ் அமைப்பின் எஞ்சியுள்ள ஆற்றலை ஒடுக்கும் வகையில், பயங்கரவாத எதிர்ப்புப் படை, கூட்டாட்சி காவற்துறைப் படை உள்ளிட்ட ஈராக்கின் ஆயுதப் படைகள், இப்பகுதி மீது தாக்குதல் நடத்த தொடங்கின என்று கூறப்பட்டுள்ளது.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040