பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை 19ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்புமுறை ஏற்கனவே சீராக இயங்கி வருகிறது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இப்பேச்சுவார்த்தையின் துவக்க விழாவில் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்புமுறை நிறுவப்பட்ட 10 ஆண்டுகளில், இதன் ஒத்துழைப்பு உயிர் ஆற்றலுடன் வளர்ந்து வருகிறது. பிரிக்ஸ் நாடுகளில் 5 உறுப்பு நாடுகளின் மொத்தப் பொருளாதார அளவு, உலகில் 12 விழுக்காட்டிலிருந்து 23 விழுக்காட்டிற்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.