• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சரக்குந்து சம்பவம் பற்றி பிரிட்டனின் அவசர கூட்டம்
  2017-06-19 15:27:36  cri எழுத்தின் அளவு:  A A A   
லண்டனில் 19ஆம் நாள் விடியற்காலை சரக்குந்து ஒன்று மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, அமைச்சரவையின் அவசர பாதுகாப்புக் கூட்டம் நடைபெறும் என்று பிரிட்டன் தலைமையமைச்சர் டெரேச மே அம்மையார் தெரிவித்தார். இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என்று காவற்துறை கருதுவதாக அவர் தெரிவித்தார்.

இலண்டனின் வடக்கிலுள்ள Finsbury பூங்காவின் மசூதிக்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர். 48 வயதான ஓர் ஆண், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பிரிட்டன் காவற்துறை தெரிவித்தது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040