பிரிக்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் மஷபானெ, பிரேசில் வெளியுறவு அமைச்சர் நுனேஸ், இந்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோரை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 19ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்தார். ஷிச்சின்பிங் பேசுகையில், பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு முறை 10 ஆண்டுகள் செயல்பட்டுள்ளது. ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறும் பிரிக்ஸ் எழுச்சியை வெளிக்கொணர்ந்து, விரிவான கலந்தாலோசனை, கூட்டுப் பங்களிப்பு, பயன்கள் பகிர்வு என்ற கருத்தைப் பின்பற்றி, பலதரப்பு வாதத்தையும் சர்வதேச உறவின் அடிப்படை விதியையும் உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்றும், நாம் இணைந்து பாடுபட்டால், பிரிக்ஸ் ஒத்துழைப்பு மேலும் பெரும் வளர்ச்சி அடைந்து, 2ஆவது தசாப்தத்தில் பொன் காலத்தை வரவேற்கும் என்றும் தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடத்த ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்ததோடு, தலைவர் பதவி வகிக்கும் சீனாவுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு நாடுகளுக்கு நன்றியையும் தெரிவித்தார்.(வான்மதி)