பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திகளின் படி, அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி 19ஆம் நாள் பிற்பகல், ஆடவர் ஒருவர் தன் வாகனத்தை அவைன்யூ தெஸ் சேம்ப்ஸ்-லைசீஸ் என்னுமிடத்தில் பிரான்ஸ் ராணுவ காவல்துறை வாகனத்தோடு மோதச் செய்து விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த ஆடவர் கடுமையான காயமடைந்தார். இதுவரை, உயிரிழப்பு நிகழவில்லை.
இச்சம்பவம் குறித்து, தற்போது, பாரிஸ் காவல் துறையைச் சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு புலனாய்வு மேற்கொண்டு வருகின்றது.(சிவகாமி)