இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஆளுநர் ராம் நாத் கோவிந்தை அரசுத் தலைவர் வேட்பாளராக இந்திய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பரிந்துரை செய்யும் என்று பாரதிய ஐனதா கட்சி 19ஆம் நாள் அறிவித்தது.
இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடனும், முன்னாள் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்குடனும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அரசுத் தலைவர் வேட்பாளர் பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணியின் முடிவை தெரிவித்ததாக பாரதிய ஐனதா கட்சியின் தலைவர் அமித்ஷா கூறினார்.
இது வரை, எதிர்க்கட்சி அரசுத் தலைவர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை.(மோகன்)