தற்போது, சீனாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொண்டுள்ள பல நீர் ஒத்துழைப்புத் திட்டப்பணிகள், இலங்கையின் சரிசமமற்ற நீர் மூலவளப் பரவல், வெள்ளப்பெருக்கு முதலிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் துணை புரியும் என்று இலங்கையின் பாசனம் மற்றும் நீர்வள நிர்வாக அமைச்சகத்தைச் சேர்ந்த அலியலத்தென தெரிவித்தார்.
சீனாவும் இலங்கையும் கூட்டாக ஒத்துழைத்து மேற்கொள்ளும் பெரிய ரக நீர் திட்டப்பணிகள், இலங்கை மக்களுக்கு நலன் பயக்கும். இலங்கை அரசு மற்றும் மக்கள், சீனாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் என்று அவர் கூறினார்.