ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றிய கடல் ஒத்துழைப்பு யோசனையைச் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் சீனத் தேசிய கடல் பணியகமும் அண்மையில் வெளியிட்டன.
சீன அரசு, அமைதி ஒத்துழைப்பு, திறப்பு மற்றும் பொறுமை உள்ளிட்ட பட்டுப்பாதை எழுச்சியைப் பயன்படுத்தி, கடல் துறைகள் பற்றி ஐ.நா வகுத்த 2030ஆம் ஆண்டிற்கான தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதை முன்னேற்றப் பாடுபடும். 21ஆவது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடன் இணைந்து பன்முக கடல் ஒத்துழைப்பை மேற்கொண்டு, திறப்பு மற்றும் பொறுமை ஆகியவற்றைக் கொண்ட ஒத்துழைப்பு மேடையைக் கூட்டாக உருவாக்கும். பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் கடல் கூட்டாளி உறவை உருவாக்குவதை முன்னேற்றும் என்று இந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.