சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் கொங் சுவன் யோ நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ஷாங்கார் தாஸ் பைராகியுடன் 20ஆம் நாள் காத்மண்டில் 11ஆவது சுற்று சீன-நேபாள தூதாண்மைக் கலந்தாலோசனையை நடத்தினார். கொங் சுவன் யோ கூறுகையில், பண்டை காலம் தொட்டு சீனாவும் நேபாளமும் நட்பு அண்டை நாடுகளாகும். தற்போது, நேபாளம் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்துக்கான முக்கிய காலத்தில் உள்ளது. நேபாளத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குச் சீனா இயன்ற அளவில் உதவியளிக்க விரும்புகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுக்கோப்பில், இரு நாடுகள் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை விரிவாக்க வேண்டும். இரு நாட்டு மக்களுக்கு மேலும் அதிகமான நன்மைகள் தர வேண்டும். இரு நாட்டு வளர்ச்சிக்கு மேலும் அதிகமான வாய்ப்புகளைக் கொண்டு வர வேண்டுமென சீனா விரும்புகிறது என்றார் அவர்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை நேபாளம் வெகுவாகப் பாராட்டியுள்ளது. நேபாளம், அதில் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்க விரும்புகிறது என்று ஷாங்கார் தாஸ் பைராகி தெரிவித்தார்.