உக்ரேன் பிரச்சினையில் ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில், ரஷியாவின் 38 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சகம் 20ஆம் நாள் அறிவித்தது.
தடை நடவடிக்கையின் படி, அமெரிக்காவில் இந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்படும். இத்துடன், அமெரிக்க மக்கள் இவற்றுடன் வியாபாரம் மேற்கொள்ள முடியாது.
தூதாண்மை முறை மூலம் உக்ரேன் அரசுரிமையை அமெரிக்கா பேணிக்காக்கும். புதிய தடை நடவடிக்கைகள் ரஷியாவுக்கு நிர்ப்பந்தத்தை தொடர்ந்து திணிப்பதற்கும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் முனுச்சின் கூறினார்.
ரஷியா எதிர்ப்பு தடை நடவடிக்கையை அமெரிக்கா செயல்படுத்தியுள்ளது இரு தரப்புகளின் நலன்களைப் பாதிக்கும். ஐ.நா வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, தடை நடவடிக்கைகளின் பாதிப்பில், ரஷியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 1 விழுக்காட்டை குறைந்துள்ளது. அமெரிக்கா 10 ஆயிரத்து கோடி அமெரிக்க டாலரை இழந்துள்ளது என்று ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 15ஆம் நாள் தெரிவித்தார்.(மோகன்)