தற்போது, இலங்கை டெங்கு காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் இது வரை சுமார் 64 ஆயிரம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 200 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இலங்கையின் சுகாதார அமைச்சகம் 20ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்நோய்க்கான தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சையை இலங்கை சுகாதார அமைச்சகம் வலுப்படுத்தி வருகின்றது.
தொடர்புடைய தரவுகளின்படி, கடந்த ஆண்டில் இலங்கையில் இந்நோயினால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 54 ஆயிரமாகும். 78 பேர் உயிரிழந்தனர்.