வங்காளதேசத்திற்கான சீனத் தற்காலிகத் தூதர் ட்சென் வெய், ஜூன் திங்கள் 20ஆம் நாள், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலியைச் சந்தித்துரையாடினார். அந்நாட்டில் மண் சரிவினால் ஏற்பட்ட கடும் உயிரிழப்பு குறித்த சீன வெளியுறவு அமைச்சரின் ஆறுதல் கடிதம் ஒன்றை ட்சென் வெய் அலிவுக்கு ஒப்படைத்தார்.
தென் கிழக்கு வங்காளதேசத்தில் கடும் நிலச் சரிவு நிகழ்ந்து, கடும் உயிரிழப்பு ஏற்பட்டதை நான் அதிர்ச்சியுடன் அறிந்துகொண்டேன். இதில் உயிரிழந்தோருக்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன். நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கின்றேன் என்று வாங்யீ இக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.