மாசுபாடு இல்லாத உலகின் நண்பர் என்ற குழுவின் கூட்டு தலைவர்களாக, ஐ.நாவிலுள்ள சீன நிரந்தர பிரதிநிதி லியூ ச்சியே யீ, ஐ.நாவிலுள்ள கென்யாவின் நிரந்தர பிரதிநிதி மஷேரிய காமவு, ஆகிய இருவரும், 20ஆம் நாள் நியூயார்க் நகரில் நடைபெற்ற பாலைவனமயமாக்கத் தடுப்பு பற்றிய கூட்டத்துக்கு தலைமை தாங்கினர். பாலைவனமயமாக்கத்தைத் தடுப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு, சீனா பாடுபட்டு வரும் முயற்சிகளை இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு தரப்புகளும் பாராட்டின.
பல வளரும் நாடுகளுக்கு தொழில் நுட்பத்தை வினியோகித்து, இந்த நாடுகளின் பாலைவனமயமாக்கத்தைத் தடுக்கும் திறனை அதிகரிப்பதற்கு சீனா உதவியளித்துள்ளதைத் தென்னாபிரிக்கா, ஈரான், தூனிஸ், செனெகால் ஆகிய நாடுகள் சுட்டிக்காட்டின.
(கலைமணி)