மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள் மற்றும் புத்தகங்களின் தவறான கருத்துகளால், ஆஸ்திரியா உள்ளிட்ட மேலை நாடுகள், சீனாவின் திபெத்தைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளன. சீனாவின் மீது தாக்குதல் நடக்கும் ஆயுதமாக, சீனாவின் திபெத் மாறியுள்ளது என்று ஆஸ்திரிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள், அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட சீன திபெத் பண்பாட்டு பரிமாற்ற குழுவுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்திய போது தெரிவித்தார்.
தற்போது மேலை நாடுகளின் சமூகம், சீன திபெத் பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருக்கவில்லை. இதனால், சீனாவின் திபெத் மற்றும் தாலேய் லாமா பிரச்சினை, சீனாவை எதிர்க்கும் ஆயுதமாக மாறியுள்ளது என்று ஆஸ்திரிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஹுப்னெர் கூறினார்.
(கலைமணி)