புதன்கிழமை நடைபெறும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான இரு நாடுகளின் உயர்நிலை கமிட்டியின் முதாலவது சந்திப்புக்கு ரஷியாவின் துணைத் தலைமை அமைச்சர் டிமிட்ரி ரோகோசின்னுடன், ஜேட்லி தலைமை தாங்குகிறார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கமிட்டி, உயர் தொழில்நுட்பத்திலான ஒத்துழைப்பு குறித்து கலந்தாலோசிக்கும் என்று இந்திய அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதேபோல், ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பிலான அரசு ஆணையங்களின் 17ஆவது கூட்டத்துக்கும் ஜேட்லி கூட்டாக தலைமை தாங்க உள்ளார்.