சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும், ஆப்பிரிக்க ஒன்றியக் குழுத் தலைவர் மோசா ஃபாகியும் 21ஆம் நாள் கூட்டாக செய்தியாளர் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் வறுமை ஒழிப்புக்கான சீன-ஆப்பிக்க ஒத்துழைப்பு குறித்து வாங் யீ கருத்து தெரிவித்தார்.
வறுமை, மனித குலத்தின் பொது எதிரியாகும். இது, பதட்டம் மற்றும் பயங்கரவாதத்திற்கு ஊற்று மூலமுமாகும். அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான சாவியாக வளர்ச்சி விளங்குகின்றது. சீனா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மிகப் பல வளரும் நாடுகளின் பொது கடமையாக வளர்ச்சி திகழ்கின்றது. தற்போது ஆப்பிரிக்காவில் சுமார் 40 கோடி மக்கள் வறுமையில் அல்லல்பட்டு வருகின்றனர். வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சியின் அவசரக் கடமையை ஆப்பிரிக்கா எதிர்நோக்குகின்றது. வறுமை ஒழிப்புத் துறையில் சீனாவின் வெற்றிகரமான அனுபவங்களைப் பெற ஆப்பிரிக்கா நாடுகள் விரும்புகின்றன. இத்துறையில் ஆப்பிரிக்காவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக வாங் யீ தெரிவித்தார்.