அமெரிக்க அரசுத் தலைவர் டோனல்ட் டிரம்ப் 22ஆம் நாள் வெள்ளை மாளிகையில் சீன அரசவை உறுப்பினர் யாங் ஜியே ச்சியைச் சந்தித்துப் பேசினார்.
சீன, அமெரிக்க அரசுத் தலைவர்கள் மார் அ லாகோ பண்ணையில் சந்திப்பு நடத்திய போது எட்டப்பட்ட பொதுக் கருத்துக்களின் வழிகாட்டலுடன், இரு தரப்புறவு அண்மையில் முக்கிய முன்னேற்றமடைந்துள்ளது. பல்வேறு துறைகளில் இரு தரப்பும் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றி வருகின்றன. அதோடு, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொண்டுள்ளன என்று யாங் ஜியே ச்சி தெரிவித்தார். அடுத்த காலக் கட்டத்தில், அமெரிக்காவுடன் இணைந்து, உயர் நிலை உள்ளிட்ட பல்வேறு நிலைப் பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவாக்கி, ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் இரு தரப்புக்கிடையேயான கருத்து வேற்றுமையை நீக்கி, இரு தரப்புறவின் தொடர்ச்சியான சீரான வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
டோனல்ட் டிரம்ப் பேசுகையில், அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்குடன் நடத்திய சந்திப்பில், பல முக்கிய பொதுக் கருத்துக்களை உருவாக்கியுள்ளதாகவும், இச்சந்திப்புக்கு பின் பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு ஆக்கப்பூர்வ முன்னேற்றமடைந்துள்ளதைக் கண்டு மகிழச்சியடைவதாவும் தெரிவித்தார். ஹேன்பெர்க் நகரில் நடைபெறும் 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டின் போது, அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கை மீண்டும் சந்தித்து, இவ்வாண்டுக்குள் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.(மீனா)