சீன கன்சு மாநிலத்தின் கான்னான் திபெத் இனத் தன்னாட்சிச் சோவிலுள்ள தேய்பு வட்டத்தின் ஸிரினா, சுமார் 200 பேரைக் கொன்ற சிறிய ஊராகும். ஆனால், இந்த ஊர் செம்படையின் நீண்ட நடைபயணத்தில் ஈடிணையற்ற பங்காற்றியுள்ளது.
1935ஆம் ஆண்டு செப்டம்பர், மத்திய செம்படை தேய்பு வட்டத்தைச் சென்றடைந்தது. மா சே துங் ஸிரினா ஊரிலுள்ள ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்தார். மூன்று நாட்களில் லாஸிகோ போரை வெல்ல அவர் அந்த இடத்தில் தான் கட்டளையிட்டார். உள்ளூர் திபெத் இனத் தலைவர் யாங் ஜி ஜிங் செம்படைக்கு தானிய உணவு உதவி அளித்தார். அதனால், தேய்பு வட்டம், செம்படையின் நீண்ட நடைபயணத்தின் எரிவாயு நிலையம் என மக்கள் பாராட்டி வருகின்றனர்.