• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானின் தென்மேற்கில் தற்கொலைத்தனமான தாக்குதல்
  2017-06-23 18:05:45  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியிலுள்ள பலுசிஸ்தான் மாநிலத்தின் குவெட்டா நகரில், காவற் சோதனை சவாடி ஒன்றில் 23ஆம் நாள் காலை தற்கொலை வாகன குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர் என்று அந்த மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

தற்போது, குவெட்டா நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இதுவரை, இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக, எந்த அமைப்பும் அறிவிக்கவில்லை.

பாகிஸ்தான் அரசுத் தலைவர் மம்னூன் ஹுசைன், இத்தாக்குதலைக் கண்டித்தார். காயமுற்றோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040