தற்போது, குவெட்டா நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதுவரை, இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக, எந்த அமைப்பும் அறிவிக்கவில்லை.
பாகிஸ்தான் அரசுத் தலைவர் மம்னூன் ஹுசைன், இத்தாக்குதலைக் கண்டித்தார். காயமுற்றோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.(ஜெயா)