பி எஸ் எல் வி - சி38 எனும் ஏவுகணை ஒன்று 31 செயற்கைக் கோள்களுடன் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 23ஆம் நாள் காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் கார்டோசாட்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளும், 30 நானோ செயற்கைக்கோள்களும் இவற்றில் அடங்கும். அனைத்து செயற்கைக் கோள்களும் திட்டமிடப்பட்ட விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. கார்டோசார்த்-2 எனும் செயற்கைக் கோள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆற்றலை உயர்த்துவதற்குத் துணை புரியும் என்று இஸ்ரோ அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.நானோ செயற்கைக்கோள் என்பது ஒரு கிலோகிராம் முதல் 10 கிலோகிராம் வரை எடையுள்ள செயற்கைக் கோள்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.(வாணி)